தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரத்தில் தேவர் ஜெயந்தி விழா

சிதம்பரம் மந்தகரையில் நரேந்திர மோடி எழுச்சி பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 106வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Updated On :31 அக்டோபர் 2013, 4:37 am

சிதம்பரம் மந்தகரையில் நரேந்திர மோடி எழுச்சி பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 106வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பேரவைத் தலைவர் ஜி.தண்டபாணி முன்னிலை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில், அனைத்து இளைஞர்களும் கட்டாயம் தேவர் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். செயலாளர் ரவி வரவேற்றார். அலங்கரிக்கப்பட்ட தேவர் படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பாரத யுவ பரிஷத் அமைப்பு பொருளாளர் குருமூர்த்தி, மநத்கரை மணி, சிவக்குமார், கண்ணன், முருகன், சொக்கநாதன், சுரேஷ், புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சுதேசி பொருள்களை வாங்க வேண்டும், ரத்ததானம் செய்ய வேண்டும் என இளைஞர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரவை செயலாளர் ரவி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.