சிதம்பரம் நகர வீதியில் உள்ள தனக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் டி.ராஜேந்தர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் நகரில் தெற்கு ரதவீதி பஸ் நிறுத்தம் எதிரே நடிகர் டி.ராஜேந்திருக்கு சொந்தமான காலி மனை உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் அவரது அனுமதி பெறாமலேயே திமுக பிரமுகர் உதவியுடன் கேரளாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக கடையை அமைத்துள்ளார். இதனை அறிந்த டி.ராஜேந்தர் தனது உதவியாளர் மதி மூலம் தனது இடத்தில் கொட்டகை போட்டு சிலர் ஆக்கரமித்துள்ளதாக நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் புகாரை பதிந்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் தீபாவளி பண்டிகை வரை வியாபாரம் செய்து கொள்வதாகவும், அதற்கு உண்டான வாடகை தொகையை அளித்து விடுவதாக துணிக்கடை வியாபாரி தெரிவித்ததால் இரு தரப்பினரிடம் எழுதி வாங்கி போலீஸார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

