திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை இரவு மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை இரவு மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைமேடையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. சடலமாக கிடந்தவர் காவி வேட்டியும், சட்டையும் அணிந்திருநதார். சட்டையில் நாகர்கோவில்-திருநெல்வேலி ரயில் பயணச்சீட்டும், சில மாத்திரைகளும் இருந்ததாம். ரத்த வாந்தி எடுத்த நிலையில் அவர் கிடந்ததால், உடல் நலக்குறைவு காரணமாக இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
அவர் அருகே கிடந்த பையில் ரேஷன் அட்டை நகல் இருந்ததாம். அதில் சங்கர், மனோன்மணீயம் சுந்தரனார் தெரு, அகஸ்தீசுவரம், கன்னியாகுமரி மாவட்டம் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
இருப்பினும் அவர் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...