வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரத்தில் எரிபொருள் சிக்கனம் குறித்து காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி

பேரணி கீழவீதி காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு நான்குவீதிகள் வழியாக காந்திசிலையை அடைந்தது. நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார்.

News image
Updated On :6 செப்டம்பர் 2013, 11:55 am

G.Sundararaj

சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பேரணி கீழவீதி காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு நான்குவீதிகள் வழியாக காந்திசிலையை அடைந்தது. நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார் வரவேற்றார். மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்டச் செயலாளர் கே.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா, வாசன் பேரவைத் தலைவர் தில்லை கோ.குமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் துரை.சிங்காரவேலு, சி.பி.ரத்தினம், மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.வெங்கடேசன், நகர துணைத் தலைவர் என்.இளங்கோவன், ஆர்.சம்மந்தமூர்த்திஸ நகர பொதுச்செயலாளர் கட்டாரி சந்திரசேகர், மகளிரணி நிர்வாகிகள் ஜி.சந்தானமேரி, கோ.ஜனகம், மீனாசெல்வம், ஆர்.சுப்புலட்சுமி, பி.ருக்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலாளர் துரைமுருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.