சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநரிடம் இளம்பெண் சனிக்கிழமை புகார் தெரிவித்தார்.அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதை அறிந்த இணை இயக்குநர் குமார், வேலூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக அப்பெண்ணை உள்நோயாளியாக அனுமதிக்க உத்தரவிட்டார்.
அரக்கோணம் வட்டம், சயனபுரத்தை அடுத்த புதுகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி மணிமேகலை. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு 23.8.13 அன்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அவர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு, வீக்கம், வலியால் அவதிப்பட்டு வந்தார்.அதையடுத்து தனியார் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தபோது, உடலில் ஏற்கெனவே பொறுத்தப்பட்டிருந்த குடும்பக் கட்டுப்பாடு சாதனத்தை எடுக்காமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக மற்றொரு அறுவை சிகிச்சை தேவை எனவும் தெரிவித்தார்களாம்.
இதுகுறித்து இணை இயக்குநர் குமாரை சந்தித்து கணவன், மனைவி இருவரும் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து அப்பெண் வேலூர் பென்லெண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


