கட்டையால் தாக்கி தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டை கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(80). இவருடைய மகன் தர்மதுரை(30). கூலி தொழிலாளி. கண்ணுசாமி தன்னுடைய சொத்துக்களை விற்று மகள்கள் 2 பேரின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதுதொடர்பாக கண்ணுசாமிக்கும், தர்மதுரைக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணுசாமி வீட்டு செலவுக்கு பணம் தருமாறு தர்மதுரையிடம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.அப்போது தர்மதுரை அங்கிருந்த கட்டையால் கண்ணுசாமியை தாக்கியதால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தர்மதுரையை இன்று கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

