சிதம்பரம் நகரில் சத்யாநகர், இளமையாக்கினார் கோயில்தெரு, மேலவீதி, நேதாஜிதெரு, வ.உ.சி.தெரு, சுப்பிரமணியர்தெரு, வாகீசநகர், குஞ்சரமூர்த்தி விநாயகர்தெரு, திரெளபதி அம்மன் கோயில் தெரு, 1வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் 5 அடி உயரத்திலான மொத்தம் 11 விநாயகர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் சிதம்பரம் தாலுக்கா பகுதியில் 6 சிலைகளும், கிள்ளையில் 5 சிலைகளும், அண்ணாமலைநகரில் 14 சிலைகளும், புவனகிரியில் 8 சிலைகளும், மருதூரில் 8 சிலைகளும், பரங்கிப்பேட்டையில் 22 சிலைகளும், புதுச்சத்திரத்தில் 91 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்தி சிலைகள் அனைத்தும் வருகிற செப்.11-ம் தேதி சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றிலும், சாமியார்பேட்டை, பெரியகுப்பம் பகுதி கடலிலும் கரைக்கப்படவுள்ளது. சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மேற்பார்வையில் அனைத்து சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.