வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விவகாரத்து கோரிய மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

சிதம்பரம் அருகே நாஞ்சலூரைச் சேர்ந்த செல்வராஜ் (48). இவருக்கும் காவனூரைச் சேர்ந்த கலைச்செல்விக்கும் (44) திருமணமாகி 17 வருடங்களகிறது. குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே

News image
Updated On :16 செப்டம்பர் 2013, 12:27 pm

G.Sundararaj

சிதம்பரத்தில் விவாகரத்து கோரிய மனைவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே நாஞ்சலூரைச் சேர்ந்த செல்வராஜ் (48). இவருக்கும் காவனூரைச் சேர்ந்த கலைச்செல்விக்கும் (44) திருமணமாகி 17 வருடங்களகிறது. குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் பச்சையப்பன்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த மனைவி கலைச்செல்வியை, கணவர் செல்வராஜ் இருசக்கர வாகனத்தால் மோதி வழிமறித்து தான் போட்ட நகைகளை கழற்றி கொடுக்குமாறு கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மனைவி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து கணவர் செல்வராஜை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.