சோழவரம் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் வீரய்யாவின் மகள் சுசீலா(10).( பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறுமி சுசீலாவை சனிக்கிழமை மர்ம நபர்கள் சிலர் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தற்போது சுசீலா சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியல் செய்தனர். சாலை மறியல் செய்தவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.