மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரம் அருகே குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

கடலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் புனிதவதி தலைமையிலான அலுவலர்கள் சிதம்பரம், புவனகிரி பகுதியில் பல்வேறு நிறுவனங்களில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். சிதம்பரம் நகரில் வெல்டிங்

News image
Updated On :19 செப்டம்பர் 2013, 2:53 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே குழந்தை தொழிலாளர்கள் இருவரை தொழிலாளர் நலத்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் புனிதவதி தலைமையிலான அலுவலர்கள் சிதம்பரம், புவனகிரி பகுதியில் பல்வேறு நிறுவனங்களில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். சிதம்பரம் நகரில் வெல்டிங் ஒர்க்க்ஷாப்பில் பணியாற்றிய சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (13), புவனகிரி பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடையில் பணியாற்றிய சிதம்பரத்தைச் சேர்ந்த செல்லதுரை (13) ஆகிய இரு சிறுவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அச்சிறுவர்களை படிக்க வைக்குமாறு அறிவுறுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளராக வேலைக்கு வைத்துக் கொண்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் நல ஆய்வாளர் புனிதவதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.