விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எச்.ஐ.வி. தொற்று குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், கல்யாணிபுரத்தில் இளைஞர்கள் மற்றும் கர்ப்பிணிகளிடையே எச்.ஐ.வி. தொற்று இல்லா புதிய உலகம் படைப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2013, 7:50 am

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், கல்யாணிபுரத்தில் இளைஞர்கள் மற்றும் கர்ப்பிணிகளிடையே எச்.ஐ.வி. தொற்று இல்லா புதிய உலகம் படைப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் இணைந்து இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நடத்தியது.

சிவகாசி, அம்மாபட்டி கலைசுடர்மணி கே.பால்ராஜூன் வெண்மணி கலைக்குழுவினர் நாட்டுப்புறக் கலைகள் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கல்யாணிபுரத்தில் ஊராட்சி மன்றத் தலைவி பேச்சியம்மாள் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இளைஞர்களிடம் ஒயிலாட்டம் மூலமும், கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லாமல் குழந்தையை பெற்றெடுக்கும் முறைகள் குறித்து கரகாட்டம் மூலமும், ஆணுறையின் பயன்பாடு குறித்து பாடல்கள் மூலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.