டி.வி. வாங்கியதில் தகராறு: பேட்டையில் தொழிலாளி அடித்துக்கொலை
திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த மைதீன்பிச்சை மகன் முகம்மதுஜான் (40). கூலித்தொழிலாளி. இவர், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஹனீபாவிடம் (60) டி.வி.யை விலைக்கு வாங்கினாராம். பின்னர் அந்த டி.


திருநெல்வேலி மாவட்டம், பேட்டையில் டி.வி. வாங்கியது தொடர்பான தகராறில் தாக்கப்பட்ட கூலித்தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த மைதீன்பிச்சை மகன் முகம்மதுஜான் (40). கூலித்தொழிலாளி. இவர், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஹனீபாவிடம் (60) டி.வி.யை விலைக்கு வாங்கினாராம். பின்னர் அந்த டி.வி. சரியில்லையென முகம்மதுஜான் திருப்பிக் கொடுத்தாராம். ஆனால், அதற்கான பணத்தை ஹனீபா கொடுக்காததால் இருவரிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாம்.சனிக்கிழமை இரவும் இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது சைக்கிளுக்கு ஏர் அடிக்கும் பம்பால் முகம்மதுஜான் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த முகம்மது ஜானை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுதொடர்பாக ஹனீபா, அவரது மகன் மைதீன் ஷேக் (36), மனைவி ஹம்சுமெஹர்நிஷா ஆகியோர் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரி்த்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...