தகவல்தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், நன்னெறி ஆகியற்றுடன் கூடியதாக உயர்கல்வி அமைய வேண்டும். வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்களாக, வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக தொலைநோக்கு சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும். கி.மு.7-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தின் தட்சசீலத்தில் உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டதாக வரலாறு கூறுகிறது. அந்த வகையில் இப்போதும்கூட இந்தியாவில், உயர்கல்வித் துறையில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.உயர்கல்வி பயில்வோருக்காக இதுவரை ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மடிக்கணினிகளை வழங்கி தமிழக அரசு ஊக்கப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உருவாகும் பொறியாளர்களில் 20 சதவிகிதம் பேர் தமிழகத்தில் பயின்று செல்கிறார்கள் என்பது பெருமைக்குரியதாகும். கல்வி என்பதை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். ஏதேனும் ஒன்றை அடுத்தடுத்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். பெற்றோரை மதிப்பதோடு, ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதும் மாணவர்களின் தலையாய கடமை என்றார் அவர்.