கெடிலம் ஆற்றில் சேற்றில் சிக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு

கெடிலம் ஆற்றில் சேற்றில் சிக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
Updated on
1 min read

கெடிலம் ஆற்றில் சேற்றில் சிக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

 கடலூர், திருவந்திபுரம் அருகே பில்லாலிதொட்டியை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் விஜய்(17). திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த ஆளவந்தான் மகன் ராமகிருஷ்ணன்(13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

 இருவரும் கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம் தடுப்பணையில் சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தனர். தடுப்பணையின் மேல் இருந்து தண்ணீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்த 2 பேரும் திடீரென சேற்றில் சிக்கி மேல வர முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினர். 

 உடனடியாக அப்பகுதி மக்கள் ஆற்றில் குதித்து, இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் சேற்றில் சிக்கிக்கொண்ட 2 பேரும் மூச்சுத்திணறி இறந்தனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு 2 பேரின் உடலையும் அப்பகுதி மக்கள் மீட்டனர்.

 இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com