மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அக்.3-ல் பல்கலைக்கழகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்: அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு முடிவு

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற அக்.3-ம் தேதி பல்கலைக்கழகங்கள் முன்பு வேலை நேரத்திற்கு பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நா

News image
Updated On :28 செப்டம்பர் 2013, 12:10 pm

ஜி.சுந்தரராஜன்

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற அக்.3-ம் தேதி பல்கலைக்கழகங்கள் முன்பு வேலை நேரத்திற்கு பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:

பெங்களூரில் அண்ணையில் நடைபெற்ற அனைத்திந்திய பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் பல்கலைக்கழகங்களில் ஆட்சி மன்றம், ஆளவை மன்றம் ஆகியவற்றில் ஊழியர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்.3-ம் தேதி ஒட்டு மொத்த ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு அக்.3-ம் தேதி வேலைநேரத்திற்கு பிறகு 1 மணி நேரம் அந்தந்த பல்கலைக்கழக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை அலுவலகம் முன்பு அக்.3-ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.