நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டில் கோபித்துக்கொண்டு திருவண்ணாமலை வந்த சென்னை மாணவிகள்:பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் நால்வரைப் போலீஸôர் அவர்களது பெற்றோர்களிடம்

News image
Updated On :2 ஏப்ரல் 2014, 3:29 pm

சரவண பெருமாள்

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் நால்வரைப் போலீஸார் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலையை மத்திய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பகல் 4 மாணவிகள் சுற்றித் திரிந்தனர். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நால்வரும் சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து இப்போது தேர்வு எழுதிக் கொண்டிருப்பதாகவும், தேர்வுக்கு நல்ல முறையில் படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 மாணவிகளையும் போலீஸôர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு திருவண்ணாமலை வந்த பெற்றோர்களிடம் 4 மாணவிகளையும் போலீஸார் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.