அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே பள்ளி மாணவி மாயம்: போலீஸார் விசாரணை

விருதுநகர் அருகே பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற மாணவியை காணவில்லை என உறவினர்கள் போலீஸாரிடம் புகார் செய்தனர்.

Updated On :4 ஏப்ரல் 2014, 12:51 pm

விருதுநகர் அருகே பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற மாணவியை காணவில்லை என உறவினர்கள் போலீஸாரிடம் புகார் செய்தனர்.

   விருதுநகர் அருகே குமாரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையாவின் மகள் மீனாட்சி(14). இவரது தாய், தந்தை இறந்ததை அடுத்து, அவரது சித்தப்பா மாரிமுத்து பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்த மாணவி விருதுநகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தும் வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் வியாழக்கிழமை பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். ஆனால், இரவு நீண்ட நேரம் வரையிலும் வீடு திரும்பவில்லையாம்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, உறவினர்கள் மற்றும் தோழி வீடுகளில் விசாரித்துள்ளார். இதில் எங்கும் வரவில்லை என்பது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பள்ளிக்குச் சென்ற மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.