மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தமிழகத்தில் திமுக, அதிமுக இடையேதான் போட்டி: தொல்.திருமாவளவன்

கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கோ.நந்தகோபாலகிருஷ்ணன், சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி ஜனநாயக

Updated On :5 ஏப்ரல் 2014, 8:52 am

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். 

கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கோ.நந்தகோபாலகிருஷ்ணன், சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாங்கள் அணி பலத்தை நம்பி நிற்கிறோம், எதிரணியினர் பண பலத்தை நம்பி நிற்கின்றனர். தற்போது தமிழகத்தில் 5 முனை போட்டி இருந்தாலும், உண்மையான போட்டி திமுக கூட்டணிக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் உள்ளது. வாக்குகளை விலைக்கு வாங்க சிலர் முயற்சி மேற்கொள்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.  இதனை தடுக்க கிராமப்புறங்களை 24 மணி நேரமும் வீடியோ ஒளிப்பதிவாளர்களை கொண்டு தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். மேலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தொண்டர்கள் மூலம் கிராமங்களில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும். தேர்தல் செலவுகள் தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. இதனால் பிரசார நேரம், செலவு ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்றார்.

முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச்செயலர் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.