தண்ணீர் தட்டுப்பாட்டை போர்க் கால அடிப்படையில் தீர்க்கப் பாடுபடுவேன்: சுயேட்சை வேட்பாளரின் உறுதிமொழி

கரூர் மக்களவைத் தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பாடுபடுவேன் என்றார் சுயேட்சை வேட்பாளர் ச.கெளரிமணி.
Updated on
1 min read

கரூர் மக்களவைத் தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பாடுபடுவேன் என்றார் சுயேட்சை வேட்பாளர் ச.கெளரிமணி.

கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜ கூட்டணியின் தேமுதிக ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளரைத் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் போட்டியிடுகின்றனர். இவற்றில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ச.கெளரிமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு 22 ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் ஆதரவு இருக்கு. கரூர் மக்களவைத்தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பாடுபடுவேன். அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலக்காதவாறும், காவல்துறையினரின் உதவியோடு வீடுகளில் திருட்டுப்போவதையும் தடுப்பேன். கரூர் பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சுரங்கப்பாதை அமைத்து தருவேன். மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன். எம்பி நிதி ரூ.5 கோடியை தொகுதி மேம்பாட்டுக்கு செலவிடுவேன். யார் ஒருவர் என்னை லஞ்சம் வாங்கினேன் என நிரூபித்தால், எனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com