வரும் ஞாயிற்றுகிழமை (13-ம் தேதி) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான விதி 12-ன் படி வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாவீர் ஜெயந்தி என்பதால்
வரும் ஞாயிற்றுகிழமை (13-ம் தேதி) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Updated on
1 min read

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான விதி 12-ன் படி வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாவீர் ஜெயந்தி என்பதால் அன்று எல்லா டாஸ்மாக் மதுக்கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மேற்படி தினத்தில் மூடப்பட்டிருக்க வேண்டும்.

 எனவே டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் 13ஆம் தேதி அன்று எல்லா மதுக்கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை மீறி எவரேனும் கடையை திறந்து வைத்திருந்தாலோ, மதுபானங்களை விற்றாலோ டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், பார் உரிமையாளர், ஹோட்டல் பார் உரிமையாளர்கள் என சம்பந்தப்பட்டவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com