வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அம்பை அருகே இளைஞர் கொலை: மைத்துனர் கைது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே தந்தை வீட்டில் இருந்த மனைவி அழைத்து வரச்சென்ற இளைஞரை அவரது மைத்துனர் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2014, 2:14 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே தந்தை வீட்டில் இருந்த மனைவி அழைத்து வரச்சென்ற இளைஞரை அவரது மைத்துனர் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரவநல்லூர் பாரதிநகர் பொத்தையில் வசிப்பவர் முப்புடாதி மகன் முருகேசன் (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காந்திநகரை சேர்ந்த திருச்செல்வம் மகள் அம்பிகா (25). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

சில தினங்களுக்கு கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அம்பிகா, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். வெள்ளிக்கிழமை மாலை மாமனார் வீட்டுக்கு சென்று முருகேசன், தனது மனைவி அம்பிகாவை வீட்டு வருமாறு அழைத்தாராம். அப்போது வீட்டில் இருந்து அம்பிகாவின் சகோதரர் மகராஜனுக்கும், முருகேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இந்த தகராறில் மகராஜன், அரிவாளால் முருகேசனை வெட்டினாராம். இதில் சம்பவ இடத்திலே முருகேசன் இறந்தார். தகவலறிந்த வீரவநல்லூர் போலீஸார், சென்று முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பினர். வழக்குப் பதிந்து மகராஜனை (24) போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.