ஓலைச் சுவடிகள் வலைச் சுவடிகளாக மாறிவிட்டன: தேசிய கணித ஆராய்ச்சி மைய இயக்குநர்
அன்றை ஓலைச் சுவடிகள், இன்றைய வலைச் சுவடிகளாக மாறிவிட்டன என்று கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கணித ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் ஆறுமுகம் கூறினார்.கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரியில், இன்றைய உயர் கல்வி வளர்ச்சிக்கு இ-கருத்துரைத் திட்டுகளின் பங்கு என்ற தலைப்பிலான ஒருநாள் தேசிய கருத்தரங்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.







