வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பணியை தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன்

News image
Updated On :14 ஏப்ரல் 2014, 1:55 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பணியை தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன் பாளையங்கோட்டையில் பார்வையிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள 23 லட்சத்து 69 ஆயிரத்து 549 வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. ஒவ்வொரு வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பணியாளர்கள் பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.இப்பணி வரும் 20 ஆம் தேதி வரை களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று வழங்குவார்கள். வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டதற்காக அத்தாட்சி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2707 வாக்குச்சாவடிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு்ள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுவார்கள்.

பூத் சிலிப் பெறாத வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். அதையும் தவற விட்ட வாக்காளர்கள் ஏப். 24 ஆம் தேதி வாக்குப்பதிவு மையங்களில் காலை 6 மணி முதல் வாக்காளர்கள் பூத் சிலிப் பெற்றுக் கொள்ளளலாம் என அறிவிக்கப்பட்டு்ள்ளது.

பாளையங்கோட்டையில் 24 ஆவது வார்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியினை தேர்தல் அலுவரும், ஆட்சியருமான மு. கருணாகரன் பார்வையிட்டார். அவருடன் உதவி தேர்தல் அலுவலர் அர. லட்சுமி, உதவி ஆணையர் பெருமாள், வட்டாட்சியர் சொர்ணகோமதிநாயகம், மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.