காசோலை மோசடி வழக்கு: ஓய்வு பெற்ற காமராஜர் பல்கலைக்கழக ஊழியருக்கு ஒராண்டு சிறை
காசோலை மோசடி வழக்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


காசோலை மோசடி வழக்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன் (43). இவரிடம் மதுரை, கோரிப்பாளையம், சின்ன கண்மாய் தெருவைச் சேர்ந்த சக்திவேல் (63) என்பவர் 20.10.2007-ம் தேதி ரூ.4.50 லட்சம் கடனாக பெற்றுள்ளார். சக்திவேல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
பணத்தை ஜோதி முருகன் திரும்பக் கேட்ட போது, சக்திவேல் அதற்காக 12.2.08-ம் தேதியிட்ட பாரத ஸ்டேட் வங்கி காசோலையைக் கொடுத்துள்ளார். இதை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு வங்கியில் ஜோதிமுருகன் செலுத்தியுள்ளார். சக்திவேல் கணக்கில் போதிய பணம் இல்லாததால், காசோலை திரும்பியுள்ளது.
இதனையடுத்து ஜோதிமுருகன், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் தனி நபர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கே.மாரியப்பன், சக்திவேலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...