வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை அருகே மின்னல் தாக்கி பெண் சாவு

மானூர் அருகே லட்சுமிபுரம் காலனித் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி முத்தம்மாள் (45). கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை

News image
Updated On :18 ஏப்ரல் 2014, 2:29 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

மானூர் அருகே லட்சுமிபுரம் காலனித் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி முத்தம்மாள் (45). கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது இடி மின்னலுடன் அப்பகுதியில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் முத்தம்மாளுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முத்தம்மாள் இறந்தார்.
இது குறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் கடுமையாக இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமையும் கடும் வெப்பம் இருந்தது. மாலையில் மேக மூட்டத்துடன் மழைக்கான அறிகுறி தென்பட்டது. எனினும் மழை பெய்யவில்லை. மானூர் பகுதியில் இடி மின்னலுடன் மிதமான பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.