1967-முதல் இரண்டு திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தும் இதுவரை தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளதா மத்திய அரசில் அங்கம் வகிக்க தனக்கு தேவையான துறைகளை ஒதுக்க பேரம் பேசிய கருணாநிதி தமிழகத்தின் நீண்ட நாள் பிரச்னையை தீர்க்கும் வகையில் நீர்வளத்துறை அமைச்சர் பதவியை கேட்டு பெறாதது ஏன் நடிகர் விஜயகாந்த மேடையில் ஏறும்போது ஒன்றை பேசுகிறார். இறங்கும் போது வேறொன்று பேசுகிறார். ஜெயலலிதா மீது இருந்த நம்பத்தன்மையை அவர் இழந்து விட்டார். கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரை எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க, நதிகளை இணைக்க நீங்கள் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இடசாரி அமைப்புகள் வெற்றி பெற்றால் உழைக்கும் மக்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம் என தெரிவித்தார்.