அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு
விக்கிரமசி்ங்கபுரம் நகராட்சிப் பகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தனர்.


விக்கிரமசி்ங்கபுரம் நகராட்சிப் பகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளில் வாக்குசேகரித்தார். வேட்பாளருடன் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலரும், வீட்டு வசதி வாரியத் தலைவருமான ஆர். முருகையாபாண்டியன், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. எம். சக்திவேல்முருகன், நகராட்சி துணைத் தலைவர் தி. கணேசபெருமாள், சிவந்திபுரம் ஊராட்சித் துணைத் தலைவர் பா. பிராங்க்ளின், நகர செயலர் த. அறிவழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு, மூலச்சி, பொட்டல் ஊராட்சி பகுதி, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் வாக்குசேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும். காங்கிரஸ் கட்சியால்தான் மத்தியில் நிலையான ஆட்சியை தர முடியும். கிராம மக்களுக்கு 100 நாட்கள் வேலை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை உறுதி செய்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார் அவர். பிரசாரத்தில் கல்லிடைக்குறிச்சி நகரத் தலைவர் கே. கைக்கொண்டான், முன்னாள் தலைவர் கே. லட்சுமணன், சு. கிருஷ்ணன், நூர்முகம்மது, கே.எஸ்.ஏ. ஹமீது, மு. இசக்கி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் உலகநாதன், முருகன், பிச்சையா, பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...