அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் அளிப்பதாக பாஜக கூட்டணி கட்சிகள் புகார்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் அளிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினர் சிதம்பரம் உதவிஆட்சியரும், உதவித் தேர்தல் அதிகாரியுமான எம்.


சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் அளிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினர் சிதம்பரம் உதவிஆட்சியரும், உதவித் தேர்தல் அதிகாரியுமான எம்.அரவிந்திடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
பாஜக மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், பாமக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், மதிமுக வழக்குரைஞர் கே.வி.மோகனசுந்தரம், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பாலு, ராஜவேலு உள்ளிட்டோர் உதவித் தேர்தல் அதிகாரி எம்.அரவிந்திடம் புகார் மனுவை அளித்தனர். மனுவில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் அளித்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி, அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...