வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை: 33.6 சதவிகிதம், தென்காசி தொகுதியில் 35.8 சதவிகிதம் வாக்குபதிவு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 11 மணி நிலவரப்படி 33.6 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 35.8 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 7:35 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 11 மணி நிலவரப்படி 33.6 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 35.8 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் கல்லிடைக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7.21 மணிக்கு 21 வாக்குகள் பதிவாகியிருந்தது. காலையில் நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் காத்திருந்து வாக்களித்தனர்.

காலை 11 மணி நிலவரப்படி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 33.6 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 35.8 சதவிகிதமும் பதிவாகி உள்ளது. அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட தெற்குபாப்பான்குளம் வாக்குச்சாவடியில் மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியனும், கோபாலசமுத்திரம் பிரான்சேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ வும் வாக்களித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.