சிதம்பரம் பஸ்நிலைய கடைகளில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டு, விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான பொருள்களை கீழே கொட்டி அழித்தார்.
சிதம்பரம் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்ற உணவு பொருள்களும், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா, வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பத்மநாபன் (சிதம்பரம்), குணசேகரன் (புவனகிரி) ஆகியோர் சிதம்பரம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் காலாவதியான பெப்சி மற்றும் குளிர்பானங்கள், சிப்ஸ், கலர்பொடியால் கலப்படம் செய்யப்பட்ட இனிப்புகள், புரூட்மிக்சர் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். மேலும் கலர்பொடியை பயன்படுத்தக்கூடாது, திறந்தவெளியில் தின்பண்டங்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


