விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாசு கலந்த குடிநீர்: நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

சிவகிரி வட்டம், கோட்டையூர் ஊராட்சியில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் மாசு கலந்து இருப்பதால் நோய் பரவுவதாக புகார் தெரிவித்து திங்கள்கிழமை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை

News image
Updated On :4 ஆகஸ்ட் 2014, 9:49 am

ஷேக் அப்துல்காதர்

சிவகிரி வட்டம், கோட்டையூர் ஊராட்சியில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் மாசு கலந்து இருப்பதால் நோய் பரவுவதாக புகார் தெரிவித்து திங்கள்கிழமை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகிரி வட்டம், நாரணாபுரம் வருவாய் கிராமம் கோட்டையூர் ஊராட்சியில் உள்ளது. இங்கு இயங்கி வரும் தனியார் எரிசாராய தொழிற்சாலையில் வெளியேற்றப்படும் திட மற்றும் திரவக் கழிவுகளால் காற்று, நீர், நிலம் ஆகியன முற்றிலும் மாறி விட்டது. அப்பகுதியில் விவசாயமும் அருகி வருகிறது. நிலமும், நீர் ஆதாரத்தை இழந்து இயற்கை தன்மை குறைந்து வருகிறது.

இந்நிலையில் ஊராட்சி மூலம் விநியோகிக்கும் குடிநீர் பருகினால் வயிற்றுப் போக்கு, கல் அடைப்பு போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே கோட்டையூர் ஊராட்சி மக்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து நீர்வரத்து பெறும் குலசேகரப்பேரி ஆற்றில் குடிநீர் திட்டம் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

ஊராட்சியில் பல வருடங்களாக கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை. மேலும் குடிநீரில் மாசு கலந்திருப்பதால் கோட்டையூர் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் இருப்பதாக புகார் தெரிவித்து பெண்கள், ஆண்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

கிராம மக்களின் முற்றுகைப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.