ராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

தனுஷுடன் இணையும் ருக்மிணி வசந்த்?

தனுஷ் நடிக்கும் அடுத்தப் படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் இணைவது பற்றி...

Dhanush / Rukmini Vasanth

தனுஷ் / ருக்மிணி வசந்த் - இன்ஸ்டாகிராம்

Published On :

தனுஷ் நடிப்பில் உருவாகும் அடுத்தப் படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிக்கும் 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தனுஷின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைகிறது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்திற்கு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, தனது அடுத்தப் படத்தில் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் தனுஷ் இணைவதாகக் கூறப்பட்ட நிலையில் இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இதில், நாயகியாக ருக்மிணி வசந்த்-ஐ நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது சாய் அபயங்கர் அல்லது ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Rukmini Vasanth in talks to play the female lead in Dhanush's next film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.