இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலியில் கண்டன பேரணி நடத்தினர். என்.எல்.சி. மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலிலிருந்து பேரணி புறப்பட்டது. அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் ராமஉதயகுமார் தலைமை வகித்தார். பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் திலகர், சி.ஐ.டி.யூ. சங்க தலைவர்கள் வேல்முருகன், ஜெயராமன், சினுவாசன், ஐ.என்.டி.யூ.சி. சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யூ. பாட்டாளி தொழிற்சங்கம், பி.எம்.எஸ்., தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐ.என்.டி.யூ.சி. தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், எச்.எம்.எஸ் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.