தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

எபோலோ வைரஸ் நோயிற்கு ஹோமியோபதி மருந்து உள்ளது: சிதம்பரம் மருத்துவர் தகவல்

1976 முதல் 1986 வரை தென்ஆப்பிரிக்கா நாட்டில் பல பேர் 6 கண்கள் உடய சிலந்தி கடித்தவுடன் உடலில் ஜூரம், தலைவலி, போன்றவைகள் ஏற்பட்டு 6 அல்லது 7 நாட்களில் உடல் உறுப்புகளில் இருந்து ரத்தம்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2014, 2:41 pm

ஜி.சுந்தரராஜன்

கொடிய வைரஸ் நோயான எபோலோ வைரஸ் நோயிற்கு ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளது என சிதம்பரத்தைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் வை.லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் வை.லட்சுமிநாராயணன் தெரிவித்தது:

தென்னாப்பிரிகாவில் உருவாகிய நோய்:

1976 முதல் 1986 வரை தென்ஆப்பிரிக்கா நாட்டில் பல பேர் 6 கண்கள் உடய சிலந்தி கடித்தவுடன் உடலில் ஜூரம், தலைவலி, போன்றவைகள் ஏற்பட்டு 6 அல்லது 7 நாட்களில் உடல் உறுப்புகளில் இருந்து ரத்தம் வடிந்து மரணம் ஏற்பட்டது. இதனை கார்நெல்டா ரிச்சர்ட்சன் என்ற மருத்துவர் ஆராய்ந்து இந்த சிலந்தி பூச்சி கடியினால் மனித உடலில் எபோலோ என்ற வைரஸ் உருவாகி மனித உயிரை போக்குகிறது என கண்டுபிடித்தார்.

ஹோமியோபதியில் மருந்துகள்: இதற்கு பல ஆய்வுகள் செய்யப்பட்டு, 1990-ல் ஹோமியோபதி மருந்தின் மூலம் இந்த வைரஸ் நோய் தாக்கம் குறைக்கப்பட்டு உயிரிழப்பை தடுக்கலாம் என 1999ல் பிரிட்டிஷ் ஹோமியோபதி அமைப்பு உலகிற்கு எடுத்துரைத்தது. ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகளை தடுப்பு மருந்தாகவும், வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்பதை உலகில் உள்ள பல ஹோமியோபதி மருத்துவமேதைகள் எடுத்துரைத்துள்ளார்கள்.

நோய்க்கான அறிகுறிகள்: இந்த கொடிய எபோலோ வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டால் ஜூரம், தாங்க முடியாத தலைவலி, மூட்டுகள் தசைகள் வலி, உடல் குணிர்ந்து போதல், தாங்க முடியாத சோர்வு, கண்கள் அதிகமாக சிவத்தல், வாந்தி வயிற்று போக்கு, வயிற்றுவலி, நோய் முந்திய நிலையில் உடல் உறுப்புகளிலிருந்து கண், காது, வாய், மூக்கு, மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறும். மேலே குறிப்பிட்ட உபாதைகளை கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் கீழ்கண்ட மருந்துகளை பயன்படுத்தலாம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோய்க்கான் மருத்துகள் பெயர்: CROTALUS HORRIDUS 30 C, BOTHRO PS 30 c, LACHE SIS MUTUS 30 c, MERCURIUS CORROSIVUS 30 c,  SECALE CORNUTUM 30c, ECHINACEA 30 c. மேற்கண்ட மருந்துகளை அனுபவம் வாய்ந்த ஹோமியோபதி மருத்துவர் மூலம் பெற்று பயன்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் வை.லட்சுமிநாராயணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.