சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டப்பட்டினத்திலிருந்து சிதம்பரம் நோக்கி வியாழக்கிழமை காலை அரசு பேருந்து வந்தது. அப்போது பெராம்பட்டு பஸ்நிறுத்தத்தில் சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் டி.சுகன்யா, சங்கரி, புவனேஸ்வரி உள்ளிட்ட மாணவியர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது படியில் வழிவிடால் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கெளதமன், ராஜேந்திரன், ராஜா உள்ளிட்ட 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது கெளதமான சுகன்யா என்ற மாணவியை கையை பிடித்து இழுந்து உள்ளே செல் என்றும், ராஜேந்திரன் மாணவியின் இடுப்பில் கை வைது தள்ளியதாக கூறப்படுகிறது. இதனை சுகன்யாவின் அண்ணன் செல்வமணி தட்டிக்கேட்டுள்ளார்.