இதுகுறித்து தலைமைப் பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்தது: தமிழக முதல்வர் அறிவித்த இந்த திட்டத்தை வடிவமைப்பு செய்து, இறுதி ஆய்வு செய்ய உள்ளோம். கதவணை அமைத்து நீரை தேக்குவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், நீர் தேக்கும் போது ஏற்படும் விளைவுகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், கரைகளை பலப்படுத்துவது குறித்தும், போக்குவரத்திற்கு ஏதுவாக மாற்றுதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். ஆய்வு செய்து முன்மாதிரி வரைவு திட்டத்தை அரசுக்கு சமர்பிக்க உள்ளோம். அதன்பிறகு அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் கதவணை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தலைமைப் பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்தார்.