தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் கடந்த இரு நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2014, 12:46 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் கடந்த இரு நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 187 பேர் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொண்ட பிறகு சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஓப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக மேற்கண்ட தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தக்காரர் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் கடந்த ஆக. 18,19 ஆகிய இரு தினங்களாக ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்த சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் தொலைபேசியில் பேசினார். அதில் தீர்வு ஏற்படவில்லை. இதனையடுத்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்றும், அடுத்த கட்ட போராட்டமாக வியாழக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.