சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 187 பேர் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொண்ட பிறகு சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஓப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக மேற்கண்ட தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தக்காரர் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் கடந்த ஆக. 18,19 ஆகிய இரு தினங்களாக ஈடுபட்டுள்ளனர்.