பரம்பிக் குளம் அணையில் நீர் திறப்பு : சர்க்கார் பதியில் மின் உற்பத்தி துவக்கம்
கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கார் பதியில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில், மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.










