28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலர்களின் அலட்சியப் போக்கு: பொதுமக்கள் சாலைமறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலர்களிடம் பல முறை முறையிட்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2014, 12:09 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலர்களிடம் பல முறை முறையிட்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் 18 மற்றும் 19-வது வார்டு பகுதிகளைச் சேர்ந்த மடத்துப்பட்டி, கீழப்பட்டி பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து நகராட்சி ஆணையாளர், குடிநீர் விநியோக மேற்பார்வையாளர் உள்ளிட்டோரிடம் பல முறை பொதுமக்கள் சார்பில் நேரில் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், குடிநீர் விநியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமுற்ற அப் பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் நான்கு பக்க சாலையையும் மறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, திங்கள்கிழமை நகராட்சி ஆணையாளர் பழனிவேலுடன் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு கண்டுகொள்ள ஆலோசனை வழங்கி பொதுமக்களை கலைந்து செல்லச் செய்தார். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.