நெல்லை அருகே விலையில்லா பொருட்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் திடீர் மறியல்
திருநெல்வேலி அருகே விலையில்லாப் பொருட்கள் பெற டோக்கன் வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருநெல்வேலி அருகே விலையில்லாப் பொருட்கள் பெற டோக்கன் வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் முதல், 2, 3 ஆவது வார்டுகளில் விலையில்லா பொருட்கள் மிக்சி, கிரைண்டர் மின்விசிறி ஆகியன வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டது. முதல் வார்டுக்கு 4,000 ம், 2, 3 ஆவது வார்டுகளுக்கு தலா 3,500 ம் உள்பட 11 ஆயிரம் விலையில்லா பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மாநகராட்சி 2 ஆவது வார்டில் தேர்வு செய்யப்ப்டட பயனாளிகளுக்கு ரேசன் கடையில் டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தங்களுக்கும் விலையில்லா பொருட்கள் பெற டோக்கன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல், 3 ஆவது வார்டு பகுதி பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி தச்சநல்லூர் புறவழிச்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய மண்டலக்குழுத் தலைவர் கி. மாதவராமானுஜம், தச்சநல்லூரில் முதல், 2, 3 ஆவது வார்டுகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...