வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கடையம் அருகே விஷம் குடித்து சகோதரிகள் தற்கொலை

கடையம் கற்பகவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சூசான் மகள் ராமலட்சுமி (24). இதே தெருவை சேர்ந்தவர் சூசானின் சகோதரர் முருகன் மகள் முத்து (13). முருகன் தனது மகள் முத்துவிடம், ராமலட்சுமியுடன்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2014, 1:28 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து சகோதரிகள் வெள்ளிக்கிழமை குருனை மருந்தினை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கடையம் கற்பகவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சூசான் மகள் ராமலட்சுமி (24). இதே தெருவை சேர்ந்தவர் சூசானின் சகோதரர் முருகன் மகள் முத்து (13). முருகன் தனது மகள் முத்துவிடம், ராமலட்சுமியுடன் பேசக் கூடாது, நட்பு வைத்து கொள்ளக் கூடாது என கண்டித்தாராம். இதில் மனமுடைந்த ராமலட்சுமி, முத்துவும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டை விட்டு வெளியேறினர். குருனை மருந்தினை குளிர்பானத்தில் கலந்து குடித்த இருவரும் ஆழ்வார்குறிச்சி சிவசைலம் அருகில் கடனாநதி கரையில் இறந்து கிடந்தனர்.

ஆழ்வார்குறிச்சி போலீஸார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.