கார் மோதி முதியவர் சாவு: தலைமை ஆசிரியர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், தேரடிக்கு பின்புறம் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே வலது ஓரமாக ரா.ராதாகிருஷ்ணன் (70) என்பவர் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது மல்லிபுத்தூரில் உள்ள அரசினர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.மகேந்திரன் (49) என்பவர் காரை அஜாக்கிரதையாக ஓட்டி வந்து ஒரு சைக்கிளின் மீது மோதி, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மீதும் மோதியுள்ளார். இதில் பலத்த காயமுற்ற ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சே.மோகன்ராம் (59) என்பவர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியர் மகேந்திரனைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...