ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விபத்தில் உயிரிழந்த கொத்தனாரின் வாரிசுதாரருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.7.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்த கொத்தனாரின் வாரிசுதாரருக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.7.25 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2014, 7:58 am

கோ.ஜெயக்குமார்

அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்த கொத்தனாரின் வாரிசுதாரருக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.7.25 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ராஜபாளையம், ராஜூக்கள் கல்லூரி எதிரேயுள்ள ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் கொத்தனார் தெய்வேந்திரன் (30). 2.5.08-ம் தேதி தெய்வேந்திரன் வேலை முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆட்டோ ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, நெல்லை பணிமனைக்குச் சொந்தமான அரசு போக்குவரத்குக் கழக பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் வந்த தெய்வேந்திரன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.

மேலும் இருவர் காயம் அடைந்தனர். தெய்வேந்திரனின் வாரிசுதாரரான மனைவி கனகலட்சுமி (20), தந்தை கருப்பையா (60), தாய் பாப்பா (52) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், நெல்லையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகம், உயிரிழந்த தெய்வேந்திரனின் வாரிசுதாரருக்கு ரூ.7.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.