தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருச்சி காந்தி சந்தை அருகேயுள்ள எடத்தெரு, பிள்ளைமார் நகரைச் சேர்ந்தவர் மணி மகன் பிரபு(எ)சரவணபிரபு (22). இவர் கடந்த மாதம் 12-ம் தேதி வரகனேரி அருகே டீக்கடை உரிமையாளர் ரெங்காதனிடம் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் திருச்சி சிறையில் உள்ளார்.
காந்திசந்தை, தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். அதன் பேரில் சரவணபிரபு செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.