காவிரியில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி ரயில்வே சந்திப்பில் ரயில் மறியலில் ஈடுபட்ட 1,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திமுக முன்னாள் அமைச்சர் நேரு, சிபிஎம் மாநகரச் செயலர் ஸ்ரீதர், தமிழக விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.