ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 190 கிராம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த டைகர் ஏர்வேஸ் விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மெட்டர் டிரெக்டர் மூலம் சோதனை செய்தனர்.

Updated On :13 டிசம்பர் 2014, 1:28 pm

திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த விமான பயணி ஒருவரிடமிருந்து 190 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த டைகர் ஏர்வேஸ் விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மெட்டர் டிரெக்டர் மூலம் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் கொண்டு வந்த டிவிடி பிளேரில் சப்தம் ஒலித்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த டிவிடி பிளேரை சோதனையிட்டதில் அதில் 190 கிராம் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ரகுமான்(45) என்பது தெரியவந்தது. இவர் கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.5.19 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.