ஆர்ப்பாட்டத்தின் போது பாலாஜி, உதயகுமார், முத்துக்குமார் பெற்றோர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் கட்சி சார்பில் நிதி வழங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தைக்கு தமிழ்ஓளி என்று பெயர் சூட்டப்பட்டது. ஆர்ப்பாட்ட முடிவில், மேற்கண்ட வழக்குகளை சிபிஐ விசாரிக்கவும், சாதிக்கொலைகளுக்கு எதிராக உடனடியாக சட்டம் நிறைவேற்றவும், தேசிய தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கும், பழனியருகே இறந்து போன முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ.25 இலட்சம் மற்றும் அரசுப்பணி வழங்கவும், சாதி கவுரவப்படுகொலைகளுக்கு எதிராக மாநில அரசு தனியே சட்டம் இயற்றவும், பாலாஜி, உதயகுமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.