ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நான்குனேரி அருகே விபத்தில் இருவர் சாவு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவில் விபத்தில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் மீது லாரி மோதியதில் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

News image
Updated On :29 டிசம்பர் 2014, 2:23 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவில் விபத்தில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் மீது லாரி மோதியதில் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

திருநெல்வேலி-நாகர்கோவில் பிரதான நான்கு வழிச்சாலையில் தெற்குகருங்குளம் அருகில் கார் ஒன்று விபத்தில் சிக்கியதாம். இந்த காரை மீட்கும் பணியில் பொக்லைன் பயன்படுத்தப்பட்டது.

இந்த பொக்லைன் இயந்திரத்தை கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த பெலிக்ஸ், கார்த்திக் ஆகியோர் இயக்கினராம். அப்போது பழவூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற கல்குவாரி லாரி ஒன்று, பொக்லைன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெலிக்ஸ், கார்த்திக் இருவரும் சம்பவ இடத்திலே இறந்தனர். தகவலறிந்த பழவூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.