தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருநெல்வேலியில் கேஜ்ரிவாலை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரது பெயர்களை வெளியிட்டு இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என

News image
Updated On :1 பிப்ரவரி 2014, 8:57 am

முத்துகுமார்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரது பெயர்களை வெளியிட்டு இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேஜ்ரிவாலை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு பேசியதாவது:

ஊழலை வேரறுப்போம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் மக்கள் மன்றத்தில் நன்மதிப்பை பெற்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி பிரபலமாக முயல்கிறார். ஆட்சி, அரசின் அதிகாரம் தெரியாமல் பேசுகிறார். ஊழலைத் தடுக்க தெருவுக்கு வந்து  முதல்வர் போராடத் தேவையில்லை. மாறாக சட்டங்களை இயற்ற வேண்டும். நிர்வாகத்தின் நடைமுறை தெரியாமல் கேஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் பேசுவதும் போராடுவதும் தொடர்ந்து வருகிறது. இது மக்களுக்கு எதிரானது. கேஜ்ரிவாலின் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் அவர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் ராம்நாத், கிழக்கு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி துறைமுக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுத்தமல்லி முருகேசன், அமீர்கான், சரவணன்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.