சிதம்பரம் மேலரதவீதி ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் அங்காளம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்டீல் மற்றும் சிமெண்ட் வியாபாரி வி.கே.தண்டபாணி (52) என்பவர் தான் 40 வருடங்களாக சேகரித்த பழங்கால நாணயங்களின் கண்காட்சியை அமைத்துள்ளார். இவர் தனது தந்தை தபால் தலைகளை சேகரித்து வந்ததை பார்த்து, 14 வயதிலிருந்து நாணயங்களை சேகரித்து வந்துள்ளார். அலுமினியம், காப்பர், பித்தளை, வெள்ளி, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 10 ஆயிரம் நாணயங்களை சேகரித்துள்ளார். ஒவ்வொரு நாணயங்களும் ஒரு வரலாற்றை கூறுவதாக அவர் தெரிவித்தார்.